நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

0
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்தியா கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மூன்று அலைகளை சந்தித்து உள்ளது. இந்நிலையில் நான்காவது அலையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப் பட உள்ளது

முழு ஊரடங்கு அமல்:

கொரோனா தொற்று, அண்டை நாடான சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது. இதன் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்தது. இந்த தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும், வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.

8 ஆம் வகுப்பு படித்தவருக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்வு நிலை திரும்பி வருகிறது. இதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இருப்பினும் பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் புதிய திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தொற்று, ஒமைக்ரான் தொற்றை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ESIC நிறுவனத்தில் ரூ.1,42,400 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி நாள்!

இந்த எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று, இந்தியாவுக்கு பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த புதிய வகை கொரோனா தொற்றை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!