ESIC நிறுவனத்தில் ரூ.1,42,400 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசின் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Social Security Officer, Manager Gr-II, Superintendent பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 21 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் வணிகவியல், சட்டம், மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினித் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது.
அனைத்து வகுப்புகளுக்கும் காலை 6.30 மணி முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!
இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் https://www.esic.nic.in/