புதிய கல்விக்கொள்கை – மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் வெளியீடு !
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று மாலை அந்த புதிய கல்வி கொள்கைகள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
- மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை
- உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
- முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
- 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.
- பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம்.
- 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
- எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு
- நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.
- கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
- தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.
- இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.
- பள்ளிகள் டிஜிட்டல் மையமாக்கப்படும்.
- கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.
அப்துல்காலம் நினைவாக போட்டி – ரூ.10 லட்சம் பரிசு தொகை – மத்திய அரசு அறிவிப்பு
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்