தேசிய செய்திகள் – ஜனவரி 2019
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019
ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download
இங்கு ஜனவரி மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
போர்ட் பிளேரில் உள்ள விமான நிலையம் அங்கீகாரம் பெற்ற அங்கீகாரம் பெற்ற குடியேற்ற சோதனை சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது
- போர்ட் பிளேயரில் உள்ள வீர சவர்கார் சர்வதேச விமான நிலையம், அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் சரியான பயண ஆவணங்களுடன் இந்தியாவிற்குள் நுழைவதற்கு / வெளியேறுவதற்கான அங்கீகாரம் பெற்ற குடியேற்ற சோதனை சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடியேற்ற சோதனைப் பணிகளுக்கான நோக்கத்திற்காக அந்தமான் நிக்கோபார் காவலர்கள் ‘சிவில் ஆணையமாக’ நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு சியாங் மாவட்டம் 100% மின்சாரம் பெற்றது
- அருணாச்சல பிரதேசம், கிழக்கு சியாங் மாவட்டம் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா-சவுபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவீத மின்சாரம் பெற்றுள்ளது.
மோரேயில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி
- பிரதமர் நரேந்திர மோடி இம்பாலின் மோரேயில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்து வைத்தார். அவர் தோலாய்தபி தடுப்பு அணை திட்டம், சாவோம்பங்கில் FCI உணவு சேமிப்பு கிடங்கு மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றைத் துவக்கி வைத்தார்.
6 நீர்ப்பாசன திட்டங்களின் மறுமலர்ச்சி
- பிரதமர் நரேந்திர மோடி 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான வட கோயல் (மண்டல் அணை) திட்டம் மற்றும் கன்ஹார் ஸ்டோன் பைப்லைன் நீர்ப்பாசன திட்டத்தை உள்ளடக்கிய புனரமைக்கப்பட்ட ஆறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பசுமை தீர்ப்பாயம் மேகாலயா அரசாங்கத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது
- தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயா அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கங்களைத் தடுக்கத் தவறியதற்காக ரூபாய்.100 கோடி அபராதம் விதித்துள்ளது.
- அபராதத் தொகையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு.
முதல் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்
- மேகாலயா முதலமைச்சர், ஸ்ரீ. கொன்ராட் கே சங்மா, “வட கிழக்கு சர்க்யூட் வளர்ச்சி: உமியம் (ஏரி வியூ) – உ லம் சோஹ்பெட்ன்பெங்- மாவ்டியாங்டியாங் – ஆர்ச்சிட் ஏரி ரிசார்ட்” சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தொடங்கி வைத்தார்.
- 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை8% வளர்ச்சி அதிகரிப்பு.
உலகளாவிய திறமை உச்சி மாநாடு
- ராஞ்சியில் உலகத் திறமை உச்சி மாநாட்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை பெறுவர் எனத் தகவல்.
விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன்
- உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவாட் மாநிலத்தில் விவசாயிகளுக்கு விரைவில் வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்றார். இது அவர்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும்.
6 வது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழா
- மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் மூன்று நாள், 6 ஆவது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ள ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகளையும் தொழில் முயற்சிகளையும் கொண்டாடுவதும், ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். 2015ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஆர்கானிக் விழா ஆண்டுதோறும் புது தில்லியில் நடக்கிறது.
I & B அமைச்சகம் 2 வது JIFFக்கான நிதி உதவி வழங்க முடிவு
- ராஞ்சியில் 2 வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவை அடுத்த மாதம் 1 ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளது. 5 லட்ச ரூபாய் உதவித் தொகையை வழங்குவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டிப்போ[Diffo] பாலத்தை திறந்து வைத்தார்
- அருணாச்சல பிரதேசத்தில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள சிபூ ஆற்றின் மீது டிப்போ[Diffo] பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் நீளம் 426 மீட்டராகும், இதன் வேலை 2011ல் துவங்கியது.
சிலிக்கான் வேலி மையத்தில் 200 ஏக்கரை சேர்க்க அரசு முடிவு
- கொல்கத்தாவின் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், மேற்கு வங்காள அரசு சிலிக்கான் வேலி மையத்திற்கு குறைந்தது 200 ஏக்கரை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் IT / ITeS / ICT இல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிலிக்கான் வேலித் திட்டம் தொடங்கப்பட்டது.
மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநில தினத்தை கொண்டாடியது
- மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநில தினத்தை01.2019 அன்று கொண்டாடியது. 1972 ஆம் ஆண்டில் இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு பிராந்தியம் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 ன் கீழ் முழுமையான மாநிலங்களாக இதே தினத்தில் இயங்க தொடங்கியது.
டெஹ்ராடூனில் இருந்து அமிர்தசரஸ்க்கு விமான சேவை துவக்கம்
- உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டெஹ்ராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து டெஹ்ராடூன் மற்றும் அமிர்தசரஸ்க்கு இடையே துவக்கி வைத்தார்.
மாண்டோவி ஆற்றின் மீது மூன்றாவது பாலம்
- ஜனவரி 27 ம் தேதி பனாஜியில் உள்ள மாண்டோவி ஆற்றின் மீது மூன்றாவது பாலத்தை திறந்து வைக்க உள்ளார் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
ஜார்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஐ&பி அமைச்சகம் உதவுகிறது
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்பட விழாக்களுக்கான இயக்குநரகம் மூலம் 2019 க்கு உதவுகிறது. இந்திய சினிமாவின் சிறந்த பக்கத்தை ஊக்குவிப்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் அடுத்த மாதம் 1 முதல் 3 ஆம் தேதி வரை ராஞ்சியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படும்.
ஆல் இந்தியா வானொலி எப்எம் ரெயின்போ கோவா வெள்ளி விழாவை கொண்டாடுகிறது
- ஆல் இந்தியா வானொலி எப்எம் ரெயின்போ கோவா வெள்ளி விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்க, கோவாவின் புகழ்பெற்ற கொங்கனி பாடகி லொர்ணா கோர்டெய்ரோவைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியானது பனாஜிக்கு அருகிலுள்ள ஓஷோக்ராஃபி ஆஃப் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசனோகிராபி, டோனா பாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவாவில் அடல் சேது சாலையை மத்திய அமைச்சர் கட்கரி திறந்து வைத்தார்
- கோவாவின் பனாஜி நகரில், மண்டோவி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மூன்றாவது கேபிள் பாலம், 5.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட “அடல் சேது”சாலையை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளம் திறப்பு
- கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நாகாலாந்து மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளத்தை புகழ்பெற்ற கால்பந்து வீரரான டாக்டர் டி.ஏஓ. அவர்களின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக திறந்துவைத்தனர்.
முதல் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்
- சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ. கே.ஜே.அல்போன்ஸ், “வடகிழக்கு சர்க்யூட் வளர்ச்சி: சிக்கிம் மாநிலத்தின் கேங்க்டோக்கில் சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது.
ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி
- ஜனவரி 12ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் ஒரு சிறப்புத் திட்டமிடல் நிகழ்வில் நேபாளத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருத்தல் போன்ற அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் கணிசமான பங்களிப்புக்காக இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி சுகீர்த்திமயா ராஷ்ட்ரதீப் ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- ஒரு பிரதிநிதி அரசு மற்றும் சமூக நீதியை நம்புகிறவர், ஒரு நல்ல சமுதாயம் ஆரோக்கியமான வியாபார காலநிலையை உருவாக்கும் என்று நம்புகிறவர், வணிகங்கள் ட்ரிபிள் பாட்டம் லைனை நடைமுறைப்படுத்த ஊக்குவிப்பவர், அதாவது இலாபங்கள், மக்களை நிலைப்படுத்த மற்றும் பொது நன்மைக்காக முழுமனதுடன் உறுதியாக வேலை செய்கின்றவருக்கு கோட்லர் தலைமைத்துவ விருது வழங்கப்படும்.
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கர் விருதுகள் 2019
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கர் 2019 விருது வழங்கும் விழாவை ராஷ்டிரபதி பவனில் தொடங்கிவைத்து விருதுகளை வழங்கினார்.
- இரண்டு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது – பால சக்தி புரஸ்கர் மற்றும் பால கல்யாண் புரஸ்கர்.
- பால சக்தி புரஸ்கர் பிரிவில் ஒரு கூட்டு விருது உள்பட 26 தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு புதுமை, கல்வி, கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் துணிச்சல் பிரிவில் விருதுகள் வழங்க பட்டது.
சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார்
- சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார் என பெயரிடப்பட்டுள்ள வருடாந்தர விருதினை மத்திய அரசு வழங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினமான ஜனவரி 23-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது அறிவிக்கப்படும்.
- பேரிடர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அமைப்புகள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பேரிடர் தடுப்பு, குறைப்பு, தயார் நிலையில் வைத்தல், மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, ஆராய்ச்சி / புதிய கண்டுபிடிப்பு அல்லது முன்னெச்சரிக்கை போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அல்லது செயல்பட்ட அமைப்புகள் சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் விருதுபெற தகுதி உள்ளவர்கள்.
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு தேசிய விருதுகள்
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர், திருமதி.மேனகா சஞ்சய் காந்தி, மாநில அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முன்னிலையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாதனைகள் புரிந்த அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு தேசிய விருதுகள், 97அங்கன்வாடி ஊழியர்களுக்கு (AWWs) புது தில்லியில் 07 ஜனவரி 2018 அன்று வழங்கப்படும்.
ஜவுளி விருதுகள்
- இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, புது டெல்லியில் 17 நபர்களுக்கு ஜவுளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் தங்கள் பங்களிப்புக்காக விருது வழங்கினார். விழாவில் ஜி.ஐ. பதிவு செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது.
‘கிசான் காந்தி‘ அட்டவணைக்கு முதல் பரிசு
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்), குடியரசு தின அணிவகுப்பு-2019ல், ‘கிசான் காந்தி’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அட்டவணைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ICAR அணியிடம் விருதை ஒப்படைத்தார்.
- ஐ.சி.ஏ.ஆர்.-ன் அட்டவணை பால் பண்ணைகளின் முக்கியத்துவம், கிராமப்புற செழிப்புக்காக நாட்டு இனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த கரிம விவசாயத்தைக் காட்டியது.
- கிராமப்புற சமூகங்களின் செழிப்புக்காக விவசாயத்தையும் கால்நடைகளையும் மேம்படுத்துவதற்காக காந்தியின் பார்வையை ICAR அட்டவணையில் “கிசான் காந்தி” சித்தரித்தது.
உலக பொருளாதார மன்ற அறிக்கை
- 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என உலக பொருளாதார மன்றத்தின் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
- நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட 25 மில்லியன் குடும்பங்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் எனத்தகவல் ”எதிர்கால நுகர்வு – வேகமாக வளர்ந்த நுகர்வோர் சந்தை” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது.
உலகளாவிய ஆலோசனை நிறுவனம் PwC அறிக்கை
- 2019 உலகின் மிகப்பெரிய பொருளாதார தரவரிசைப் பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை விட முன்னேறி, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என உலகளாவிய ஆலோசனை நிறுவனமான PwC தெரிவித்துள்ளது.
- 1) அமெரிக்கா – 19.39 டிரில்லியன் டாலர்கள் 2) சீனா – 12.23 டிரில்லியன் டாலர்கள்
2019 எடெல்மேன் நம்பிக்கையான நாடுகளின் தரவரிசை குறியீடு
- அரசு, வணிகம், என்.ஜி.ஓக்கள் மற்றும் ஊடகங்கள் பிரிவில் உலகின் மிக நம்பத்தகுந்த நாடுகளில் இந்தியா உள்ளது.
- சீனா மக்களிடையே தகவல் அளிப்பதிலும் பொது மக்கள் நம்பிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் மக்களிடையே தகவல் அளிப்பதில் இரண்டாவது இடத்திலும், பொது மக்கள் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.