தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2019

0

தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2019

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட்  2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஆகஸ்ட் 2019

முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

  • உடனடி முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யும் 2019 ஆம் ஆண்டு முஸ்லீம் பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் 19 செப்டம்பர் 2018 முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவின்படி உடனடி முத்தலாக் நடைமுறை செல்லாததாகவும் சட்டவிரோதமாகவும் மேலும் இதை தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவித்தது.

இந்தியா  போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை எஸ்.எஃப்.பி. ஆக மாற்ற தபால் துறை முடிவு

  • இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை (ஐபிபிபி) ஒரு சிறிய நிதி வங்கியாக (எஸ்.எஃப்.பி) மாற்ற தபால் துறை முடிவு செய்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறிய கடன்களை வழங்க முடியும். 100 நாட்களில் ஐபிபிபிக்கு ஒரு கோடி கணக்குகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது.

நான்கு மாநிலங்களில் ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது

  • தேசிய உணவு பாதுகாப்பிற்காக அரசாங்கம் ஒரு பெரிய ஊக்கமாக, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு திட்டத்தை முதல் அறிமுகப்படுத்தியது.

காம்பியாவில் மகாத்மா காந்தி மற்றும் காதி பற்றிய கண்காட்சியை ஜனாதிபதி கோவிந்த் திறந்து வைத்தார்

  • மகாத்மாவின் 150 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் காம்பியாவில் உள்ள எபுஞ்சன் தியேட்டரில் மகாத்மா காந்தி மற்றும் காதி பற்றிய கண்காட்சிகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த கண்காட்சிகள் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறும்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) தபால்தலையை வடிவமைப்பதற்கான போட்டியை தொடங்கியுள்ளது

  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) கோல்டன் ஜூபிலி பதிப்பை நினைவுகூரும் வகையில் முதல் நாள் அட்டையுடன் தபால்தலையையும் வடிவமைப்பதற்கான போட்டியை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

BIS அங்கீகாரம் பெற்றது பாஷ்மினா தயாரிப்புகள்

  • பஷ்மினா தயாரிப்புகளின் தனிச்சிறப்பிற்கு அங்கீகாரம் அளித்தது இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்). இந்த அங்கீகாரம் மூலம் பஷ்மினாவின் கலப்படத்தைத் தடுக்கவும், பஷ்மினா மூலப்பொருட்களைத் தயாரிக்கும் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் நாடோடிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் உதவும்.

லலித் கலா அகாடமி 65 வது அறக்கட்டளை தினத்தை கொண்டாடுகிறது.

  • தேசிய கலை அகாடமியான, லலித் கலா அகாடமி, தனது 65 வது அறக்கட்டளை தினத்தை புதுதில்லியில் கொண்டாடியது. லலித் கலா அகாடமி 1954 ஆம் ஆண்டில் புது தில்லியில் இந்திய கலை பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வருடத்தில் சேகரிக்கப்படவுள்ளது தேசிய மக்கள் தொகை பதிவு தரவு

  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (என்.பிஆர்) கீழ் இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக் மற்றும் குடும்ப விவரங்களை பதிவு செய்வதற்கான அடுத்த சுற்று செப்டம்பர் 2020 இல் நடத்தப்படும். இந்த பயிற்சி பத்து ஆண்டுகள் கொண்ட கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டது மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இணைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே & கே மறுசீரமைப்பு மசோதா 2019 ஐ மாநிலங்களவையில் அரசு அறிமுகப்படுத்தியது

  • எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 2019 ஐ மாநிலங்களவையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமின்றி ஜம்மு-காஷ்மீரிடமிருந்து 370 வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும் நகர்த்தியது.

மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியது

  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. இந்த மசோதா ஜம்மு-காஷ்மீரை சட்டமன்றம் கொண்ட ஒரு யூனியன் பிரதேசமாக மற்றும் லடாக்கை சட்டமன்றம் இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற அரசாங்கம் முயல்கிறது.

சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

  • முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது 67வது வயதில் காலமானார். 2014-2019 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய ஸ்வராஜ், 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து விலகிய அவர் புதிய அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் முழுநேர பெண் வெளியுறவு துறை அமைச்சர் ஆவார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சமக்ரா சிக்ஷா-ஜல் சுரக்ஷாவைத் தொடங்கவுள்ளார்

  • நாட்டின் அனைத்து பள்ளி மாணவர்களிடமும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ ஆகஸ்ட் 9, 2019 அன்று புதுதில்லியில் ‘சமாக்ரிக்ஷா-ஜல் சுரக்ஷா’ இயக்கத்தை தொடங்கவுள்ளார்.

வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இ-ரோஜ்கர் சமாச்சார் தொடங்கப்பட்டது

  • ரோஜ்கர் சமாச்சாரின் இ-பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்து ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது.

சி.ஐ.சி “மனித வள மேம்பாடு மற்றும் தகவல் உரிமைச் சட்டம் 2005” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யவுள்ளது.

  • மத்திய தகவல் ஆணையம் 2019 ஆகஸ்ட் 09 ஆம் தேதி “மனித வள மேம்பாடு மற்றும் தகவல் உரிமைச் சட்டம் 2005” என்ற கருத்தரங்கை நடத்துகிறது.
  • குறிப்பாக கல்வித் துறைக்கு மனிதவள மேம்பாட்டில் நல்ல நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதை கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்பட்டது

  • மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ என்ற இந்திய அரசின் திட்டத்தை தொடங்கினார், இது நாடு முழுவதும் உள்ள நியாயமான விலைக் கடைகளில் இருந்து  பயனாளிகளுக்கு ரேஷன் பொருள் கிடைக்க  உதவக்கூடிய திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

விக்ரம் சரபாயின் 100 வது பிறந்த நாள்

  • டாக்டர் விக்ரம் சரபாய் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தையாக கருதப்படுகிறார். ஆகஸ்ட் 12, 1919 இல் அகமதாபாத்தில் பிறந்த டாக்டர் சரபாய் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார். நவம்பர் 1947 இல் அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (பிஆர்எல்) நிறுவினார்.
  • டாக்டர் சரபாய் 1962 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழுவை நிறுவினார், பின்னர் இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) என மறுபெயரிடப்பட்டது. திருவனந்தபுரத்தில் தும்பா எக்குவடோரியல் ராக்கெட் ஏவுதல் நிலையம் அமைக்க உதவினார்.

இந்திய மருத்துவ முறைகளை வழங்கும் சிறப்பு மருத்துவமனைகளை அரசு தொடங்க உள்ளது

  • சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளை வழங்கும் சிறப்பு மருத்துவமனைகள் நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் தொடங்கப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வேலூரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைக்கும் போது இதனை அவர் கூறினார்.

 இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது

  • ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் “ஸ்வச் சர்வேஷன் கிராமீன் 2019” என்ற மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வை தலைநகர் டெல்லியில் தொடங்கினார். இந்த ஆய்வு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 30, 2019 வரை, இந்தியா முழுவதும் 698 மாவட்டங்களில் 17,450 கிராமங்கள் மற்றும் 87,250 பொது இடங்கள், அதாவது பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது சுகாதார மையங்கள், ஹாட் / பஜார் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பை நடத்தவுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பாகும்.

ஜல் ஜீவன் மிஷனை அரசு தொடங்கவுள்ளது

  • குழாய் நீரை வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் ஜல் ஜீவன் மிஷனைத் தொடங்கிவுள்ளது, இந்த திட்டத்திற்கு ரூ .3.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட அரசு தீர்மானித்துள்ளது.

ஜல் ஜீவன் மிஷனை அரசு தொடங்கவுள்ளது

  • குழாய் நீரை வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் ஜல் ஜீவன் மிஷனைத் தொடங்கிவுள்ளது, இந்த திட்டத்திற்கு ரூ .3.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட அரசு தீர்மானித்துள்ளது.

தேசிய பழங்குடி விழா “ஆடி மஹோத்ஸவ்

  • ஆதி மஹோத்ஸவ் (தேசிய பழங்குடியினர் திருவிழா), இந்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், இந்திய அரசு மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரிஃபெட்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 2019 ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 25 வரை லே-லடாக் உள்ள போலோ மைதானத்தில் தொடங்கவுள்ளது.
  • திருவிழாவின் கருப்பொருள்:“பழங்குடி கைவினை, கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தின் ஆன்மிக கொண்டாட்டம்”.

நான்கு புதிய தயாரிப்புகள் புவிசார் குறியீட்டைபெற்றுள்ளது

  • கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களத்தின் கீழ் உள்ள புவியியல் குறியீடு வழங்கும் அமைப்பு (ஜிஐ) சமீபத்தில் 4 புதிய புவிசார் குறியீட்டை பதிவுசெய்துள்ளது.இதில் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழணி முருகன் கோவில் பிரசாதமான பழனி பஞ்சமிர்தம், மிசோரம் மாநிலத்தின் தவ்ல்ஹோஹ்புவான் மற்றும் மிசோ புவான்சிஃப்ரோம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த திருர் வெற்றிலை இலை ஆகியவை பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீட்டு பட்டியலில் சமீபத்திய சேர்க்கைகள் ஆகும்.

மத்திய உள்துறை அமைச்சர் கர்பி பவன் மற்றும் திமாசா பவனுக்கு அடிக்கல் நாட்டினார்

  • மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா வடகிழக்கு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று துவாரகாவில் நடைபெற்ற கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சிலின் கர்பி பவன் மற்றும் திமாசா பவன் ஆகியோரின் அடிக்கல் நாட்டும் விழாவில் அவர் உரையாற்றினார்.சர்வதேச செய்திகள்.

உலகின் பழமையான வேலை செய்யும் நீராவி என்ஜின்

  • 73 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில், சென்னை எக்மோர் முதல் கோடம்பாக்கம் வரை ஈ.ஐ.ஆர் -21 எனும் ஒரு பாரம்பரிய சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. EIR-21 என்பது உலகின் பழமையான வேலை செய்யும் நீராவி என்ஜின் ஆகும். தோற்றத்தில் fairy queen போன்றறிருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் 164 ஆண்டுகள் பழமையானது.

டிசம்பர் 2019 முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படவுள்ளது

  • இந்த ஆண்டு டிசம்பர் முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டாக்ஸ் கட்டாயமாகிவிடும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். ஃபாஸ்டாக்கை பெற்ற வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நிறுத்தாமல் பிரத்யேக ஃபாஸ்டாக் பாதை வழியாக பயணிக்க முடியும்.

சான்-சாதன் ஹாகாதான் என அழைக்கப்படும் ஸ்வச் பாரத் மிஷனின் முயற்சி

  • ‘சான்-சாதன்’ ஹாகாதான் என அழைக்கப்படும் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் அதன் சமீபத்திய முயற்சிக்கு அரசாங்கம் விண்ணப்பங்களை கோருகிறது,இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை (திவ்யாங்ஜன்) எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • அடல் புதுமை மிஷன், நிதி ஆயோக், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மற்றும் 91 ஸ்ப்ரிங் போர்டு ஆகியவற்றுடன் இணைந்து ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை இந்த முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

‘ஃபிட் இந்தியா இயக்கம்

  • பிரதமர் நரேந்திர மோடி ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்த நாடு தழுவிய பிரச்சாரம், அன்றாட வாழ்க்கையில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டுகளை மக்களிடையில் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு தலைமையில் 28 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘மிஷன் ரீச் அவுட்’

  • ஜம்மு-காஷ்மீரில்,” மிஷன் ரீச் அவுட்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக”,இந்தியா ராணுவம் லாப்ரி டாப் கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கும், ஜம்மு பிரிவின் ரியசி மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமங்களுக்கும் கையடக்கமான சூரிய விளக்குகளை வழங்கியது . இந்த கிராமங்களுக்கு குறைந்த அளவு மின்சார வசதி இருந்ததால், சூரிய விளக்குகளை விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேலும் இதுவரை மொத்தம் 180 கையடக்கமான சூரிய விளக்குகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன.

FSSAI இன் தேசிய உணவு ஆய்வகம

  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அதிநவீன தேசிய உணவு ஆய்வகம் என்.சி.ஆர் காசியாபாத்தில் திறக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர் FSSAI யின் அதிநவீன தேசிய உணவு ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் “இந்தியாவில் உணவு ஆய்வகங்கள்: ஒரு மெட்டா ஆய்வு” என்ற அறிக்கையை வெளியிட்டு 13 தேசிய குறிப்பு ஆய்வகங்களுக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.

பிரான்சில் இரண்டு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதின் நினைவாக நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • பிரான்சின் மோன்ட் பிளாங்க் மலையின் அடிவாரத்தில் இரண்டு ஏர் இந்தியாவிமானம் விபத்துக்குள்ளானதின் நினைவாக ஒரு நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இதில் இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் ஹோமி ஜே.பாபா உட்பட பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1950 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் விபத்துக்குள்ளான இரண்டு ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவரான பாபா மற்றும் பல இந்தியர்களுக்காக மோன்ட் பிளாங்க் மலையின் அடிவாரத்தில் உள்ள நிட் டி ஏகிள் என்ற இடத்தில் நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

  • 66 வயதான பாஜகவின் தலைவரான அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24 அன்று புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் காலமானார். மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நிகம்போத் காட்டில் முழு மாநில மரியாதைகளுடன் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டார்.

‘பூர்ணா’ திட்டம்

  • 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதற்காக குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி ‘பூர்ணா’ திட்டத்தை தொடங்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாயிகளின் செழிப்புக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் உத்திகள்

  • மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் விவசாயிகளுக்கான செழிப்பு பற்றிய அமர்வு புதுடில்லியில் மத்திய வேளாண் அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கண்டறியும் கருவிகள், பல்வேறு ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் மற்றும் 8 ஐ.சி.ஏ.ஆர் மொபைல் செயலிகள் ஆகியவற்றை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகத்தை அறிமுகப்படுத்துகிறது

  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்விக்கான தேசிய மிஷனின் கீழ், (என்.எம்.இ.சி.டி) தேசிய டிஜிட்டல் நூலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒற்றை சாளர தேடல் வசதியுடன் கற்றல் வளங்களின் கட்டமைப்பை உருவாக்குகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் ஆலை

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் டெஹ்ராடூனில் பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் ஆலை ஒன்றை திறந்து வைத்தனர். இந்த ஆலை இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அதன் விஞ்ஞானிகள் கழிவு பிளாஸ்டிக்குகளை எரிபொருளாக பதப்படுத்துவார்கள். இந்த ஆலை ஒரு டன் பிளாஸ்டிக்கிலிருந்து 800 லிட்டர் டீசலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

அருண் ஜெட்ல்லி ஸ்டேடீயும்

  • டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் அருண் ஜெட்லி ஸ்டேடியம் என்று  பெயர் மாற்றப்படவுள்ளது. டி.டி.சி.ஏ-வில் தனது பதவிக் காலத்தில், உலகத் தரம் வாய்ந்த ஆடை அறைகள் மற்றும் அதிக ரசிகர்கள் அமரும் வசதிகள் அமைத்து ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தை நவீன வசதியாக புதுப்பித்த பெருமைக்குரியவர் அருண் ஜெட்லி ஆவார்.

லடாக்கி-கிசான்-ஜவன்-விஞ்ஞான் மேளாவின் 26 வது மேளாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லேஹ், லடாக்கில் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனம் (டிஹார்) ஏற்பாடு செய்த லடாக்கி-கிசான்-ஜவான்-விஞ்ஞான் மேளாவின் 26 வது மேளாவை திறந்து வைத்தார், ராஜ்நாத் சிங், காஷ்மீர் எப்போதும் எங்களுடன் உள்ளது, அப்படியே இருக்கும் என்றும் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை ஆகியவற்றை எதிர்த்துப் போராட இலவச உணவுத் திட்டத்தை சத்தீஸ்கர் அரசு தொடங்கவுள்ளது

  • ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு தினமும் “இலவச சத்தான உணவை” வழங்கும் திட்டத்தை தொடங்கப்போவதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

சிறு விவசாயிகளுக்கான நேரடி பண பரிமாற்ற திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு தொடங்கியுள்ளது

  • துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் ‘முக்கிய மந்திரி கிருஷி ஆஷிர்வாத்  யோஜனா’ ஒன்றைத் தொடங்கினார், இதன் கீழ் மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கருக்கும் குறைவான பண்ணை நிலம் கொண்ட பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 5,000 முதல் 25,000 ரூபாய் வரை பெறுவார்கள்.

ராய்ப்பூரில் 15 கி.மீ நீளமுள்ள தேசியக் கொடியின் மனித சங்கிலி நிகழ்ச்சி 

  • சத்தீஸ்கரில், சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பல சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் சேர்ந்து 15 கி.மீ நீளமுள்ள தேசியக் கொடியை ராய்ப்பூரில் மனித சங்கிலி மூலம் உருவாக்கினர். வசுதைவ் குடும்பகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி,(மிக நீண்ட மூவர்ண கொடிக்காக  ) சாம்பியன்ஸ் உலக சாதனைகளின் புத்தகத்தில் இடம்பெற்றது.

நாகாலாந்து மாநில காவல் துறைக்கு முதல் ஆய்வக-பயிற்சி  மையம்

  • நாகாலாந்து மாநில காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான முதல் ஆய்வக மற்றும் பயிற்சி மையத்தைப் பெற்றுள்ளது.  நாகாலாந்தின் ஐ.ஜி.பி, சி.ஐ.டி,ஜெகோட்சோ மேரோ , பல்வேறு போலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 50 காவல்துறையினருக்கு உடனடியாக இங்கு  பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!