2வது திருமணத்திற்கு தயாரான நாகசைதன்யா – மணப்பெண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நடிகையான நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்த நிலையில் நாகசைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகசைதன்யா:
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி நடித்து வரும் சமந்தாவும் தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ள நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் வழக்கம் போல படங்களில் நடித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இருவரும் செய்தியாளர்களுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.
புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!
சில மாதங்களுக்கு பிறகு இவர்களின் 4ம் திருமண நாள் வரவிந்த நிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்து இருவரும் விளக்கமளிக்கவில்லை. விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர்.
அம்மா ஆலியாவுடன் குதித்து விளையாடிய ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
இந்த நிலையில் நடிகர் நாகசைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் இவரின் வீட்டார் இவருக்கு பெண் தேடி வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கிடையில் ‘ஓ பேபி’ படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி அடுத்ததாக இயக்கும் படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வருகிறார்.