Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.16 லட்சம் வருமானம் தரும் திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் செயல்பட்டு வரும் சிறப்பான பல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தொகுப்பில் அங்கு செயலில் இருந்து வரும் திட்டங்களில் எது பெஸ்ட் மற்றும் எதில் வட்டி அதிகம் வாங்க முடியும் ஆகிய தகவல்களை பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்:
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்குக்காகவும், சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. கட்டாயமான முறையில் மக்கள் சேமிப்பு கணக்கை வைத்து உள்ளது அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
2வது திருமணத்திற்கு தயாரான நாகசைதன்யா – மணப்பெண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் தற்போது அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு திட்டம் தங்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதந்தோறும் 100 ரூபாயை கூட சேமிக்கலாம். முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். மேலும் அதனை தொடர்ந்து, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு திட்ட கணக்கை தொடங்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியுடன் சேர்த்து காலாண்டு முடிவில் கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு 5.80 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து தற்போதைய திட்டத்தில் 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் இந்தத் தொகையானது உங்களுக்கு சுமார் ரூ.16 லட்சத்தை வருவாயைத் தரும். கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது, இது முதலீட்டாளர்கள் அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று அஞ்சல் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.