US ஓபன் டென்னிஸ் போட்டி – ரபேல் நடால் விலகல், இதுதான் காரணம்!
US ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பிரபல வீரர் ரபேல் நடால் விலகியுள்ளார். உடல்நிலையினை சுட்டி காட்டியவர் ரசிகர்களுக்கு அது குறித்த விளக்கத்தை வெளியிட்டு உள்ளார்.
ஆகஸ்ட் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
US ஓபன் டென்னிஸ் போட்டி :
டென்னிஸ் உலகில் மூவேந்தர்களாக திகழ்பவர்களில் ஒருவர் ரபேல் நடால். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களை குவித்தவர், ரபேல் நடால். டென்னிஸ் உலகில் அனைவர்க்கும் சீனியர் ஆகவும், ஜாம்பவானாகவும் திகழ்ந்து கொண்டுள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறையும் கைப்பற்றி அசத்தியவர்.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை – ஆகஸ்ட் 23ல் கூடும் சட்டமன்றம்!
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார், நடால். அதன் காரணமாக விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது குறித்த ஒரு அறிவிப்பினையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!
அதில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு வருடமாக அவர் தவித்து வருவதாகவும், அதில் இருந்து மீண்டும் வருவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஊக்கமூட்டும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விரைவில் மீண்டு வருவதாகவும், அதற்கு தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், விரைவில் தனது தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்து உள்ளார். ஏற்கனவே US ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.