தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்ட போதிலும் மது விற்பனை குறையவில்லை. மாறாக 8 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் :
தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு என்று தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு தரப்பினரும் மது கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. 6,736 மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவை தற்போது 5,425 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மது கடைகள் மூடப்பட்டு வருகிறது அதே போல் கடும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த காலங்களில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது 2 % முதல் 12 % வரை மது விற்பனை உயர்ந்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரீமியம் வகை மது 2 சதவீதமாக விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இதன் விற்பனை 16 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக கூடியுள்ளது. 2007-ல் உள்நாட்டில் தயாரிக்கும் அயல்நாட்டு மதுவகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகின. (இது 2021-ல் 50 லட்சம் பெட்டியாக உயர்ந்துள்ளது. சாதாரண மது வகைகளை விட பிரிமியம் வகை மது அனைத்தும் விலை அதிகம் என்பதாலும் விருப்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.