அமெரிக்க அதிரபரால் கடும் வீழ்ச்சி அடைந்த மும்பை பங்குச் சந்தை..!! ” முதலீட்டாளர்கள் அதிர்ச்சி”…!
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் தினசரி கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும், 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கூடுவதும், குறைவதுமாக இருந்த நிலையில், இன்று(21.01.2025) இந்திய பங்குகளின் விலை சரமாரியாக சரிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து, இன்றைய மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 1431 புள்ளிகள் சரிந்து 65,742 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டுமின்றி, இன்று ஒரே நாளில் ரூ.7.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், “அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தில் பங்கு சந்தையின் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



























