முக்கியமான ஒப்பந்தங்கள் – டிசம்பர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018
இங்கு டிசம்பர் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download
சர்வதேச ஒப்பந்தங்கள்:
வ.எண் | ஒப்பந்தம் | துறை | நாட்டின் விவரங்கள் |
1 | இந்தியா – ஜப்பான் | அஞ்சல் துறை, சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு துறை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு- மத்திய அமைச்சரவை ஒப்புதல் | பிரதமர் – சின்சோ அபே |
மாமன்னர் – ஆக்கிகிட்டோ | |||
தலைநகரம் – டோக்கியோ | |||
நாணயம் – யென் | |||
2 | இந்தியா – அமெரிக்கா | புவி அறிவியல் துறையில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். | ஜனாதிபதி – டொனால்ட் ட்ரம்ப் |
துணை ஜனாதிபதி – மைக் பென்ஸ் | |||
தலைநகரம் – வாஷிங்டன், டி.சி. | |||
நாணயம் – அமெரிக்க டாலர் | |||
3 | இந்தியா – ரஷ்யா | மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா,கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். | பிரதமர் – விளாதிமிர் பூட்டின் |
ஜனாதிபதி-திமித்ரி மெட்வெடெவ் | |||
தலைநகரம் – மாஸ்கோ | |||
நாணயம் – ரூபிள் | |||
4 | இந்தியா – பிரான்ஸ் | இந்தியா – பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல். | பிரதமர் – எடுவர்ட் ஃபிலிப் |
ஜனாதிபதி – இம்மானுவேல் மாக்ரோன் | |||
தலைநகரம் – பாரிஸ் | |||
நாணயம் -யூரோ | |||
5 | இந்தியா – யுஏஇ | ஆபிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பிற்கு, நாணய மாற்றுவியலுக்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கும் இடையே கையெழுத்தானது. | ஜனாதிபதி – கலீஃபா பின் ஸைத் அல் நஹியான் |
பிரதம மந்திரி – முகம்மது பின் ரஷீத் அல் மக்மூம் | |||
தலைநகரம்- அபுதாபி | |||
நாணயம் – யூஏஈ டிர்ஹம் | |||
6 | ADB மற்றும் இந்தியா | ஒடிசாவில் திறமை மேம்பாட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி 85 மில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்து. | தலைவர் – தாகிகோ நாகோ |
உருவாக்கம் -19 டிசம்பர் 1966 | |||
தலைமையகம் – மானிலா, பிலிப்பைன்ஸ் | |||
உறுப்பினர் -67 நாடுகள் | |||
7 | ADB மற்றும் இந்தியா | தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான 31 மில்லியன் டாலர் கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. | தலைவர் – தாகிகோ நாகோ |
உருவாக்கம் -19 டிசம்பர் 1966 | |||
தலைமையகம் – மானிலா, பிலிப்பைன்ஸ் | |||
உறுப்பினர் -67 நாடுகள் | |||
8 | இந்தியா – சவுதி அரேபியா | 2019ஆம் ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க சவுதி அரேபியாவிடம் இந்தியா கோரிக்கை. சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சவுதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். இரு தலைவர்களும் இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். | கிங் – சல்மான் |
பிரின்ஸ் – முகம்மது | |||
தலைநகரம் – ரியாத் | |||
நாணயம் – சவுதி அரேபியா | |||
9 | இஸ்ரோ -ராஸ்காஸ்மோஸ் | இஸ்ரோ மற்றும் ராஸ்காஸ்மோஸ் 2018ம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ‘மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் கூட்டு நடவடிக்கைக்காக’ ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. | பிரதமர் – விளாதிமிர் பூட்டின் |
ஜனாதிபதி – திமித்ரி மெட்வெடெவ் | |||
தலைநகரம் – மாஸ்கோ | |||
நாணயம் – ரூபிள் |
பிற ஒப்பந்தங்கள்:
வ.எண் |
ஒப்பந்தம் |
துறை |
நாட்டின் விவரங்கள் |
1 |
இந்தியா – தஜிகிஸ்தான் |
வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். |
ஜனாதிபதி – ஈமோமாலி ரஹ்மான் |
பிரதமர் – அப்துல்லா அரிபோவ் |
|||
தலைநகரம்- துஷன்பே |
|||
நாணயம் – சோமனி |
|||
2 | இந்தியா – உஸ்பெகிஸ்தான் |
அமைதிக்காக விண்வெளி ஆய்வு மற்றும் கண்டறிதல்களைப் பயன்படுத்துவதற்காக இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். |
ஜனாதிபதி – ஷாவத் மிர்சியோவ் |
பிரதமர் – அப்துல்லா அரிபோவ் |
|||
தலைநகரம் – தாஷ்கண்ட் |
|||
நாணயம் – உஸ்பெக் சாம் |
|||
3 | இந்தியா –ஜிம்பாப்வே |
புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். |
ஜனாதிபதி-எமர்சன் மானங்கவ |
துணை ஜனாதிபதி – கான்ஸ்டன்டினோ சிவன்கா கும்போ மொஹதி |
|||
தலைநகரம் – ஹராரே |
|||
நாணயம் – அமெரிக்க டாலர் | |||
4 | இந்தியா மற்றும் மொராக்கோ |
விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதற்கு இந்தியா-மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். |
ஜனாதிபதி – முகம்மது VI |
பிரதமர் – சாதேடியன் ஒத்மணி |
|||
தலைநகரம் – ரபாட் |
|||
நாணயம் – மொராக்கோ டிரம்ஹாம் |
|||
5 | இந்தியா–அல்ஜீரியா |
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் துறையில் இந்தியா-அல்ஜீரியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி. |
ஜனாதிபதி – அப்திலாஸிஸ் போடேபிளிகா |
பிரதம மந்திரி – அகமது ஓயாஹியா |
|||
தலைநகரம் – அல்ஜியர்ஸ் |
|||
நாணயம் – தினார் |
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரளாவுக்கு ரூ. 3048 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
- கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கேரளாவுக்கு 3048 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.
2023- ஐ சர்வதேச சிறுதானியங்கள் வருடமாக அனுசரிக்க FAO கவுன்சில் ஒப்புதல்
- உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, FAO கவுன்சில் 2023-ஐ சர்வதேச சிறுதானியங்கள் வருடமாக அனுசரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்
- வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- வேளாண் துறையில் உலக சக்தியாக இந்தியாவை உருவாக்குதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் பொருத்தமான கொள்கை திட்டங்கள் மூலம் இந்திய வேளாண் வளங்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையாகும்.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வாரணாசியில் சரக்கு[freight] கிராமத்தை மேம்படுத்த ஒப்புதல்
- கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள நீர்வழி முனையத்திற்கு அருகிலுள்ள வாரணாசியில் உள்ள சரக்கு கிராமத்தை மேம்படுத்த கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது. இது 156 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
பஞ்சாபில் ஷாபுர்கண்டி அணை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
- நதி நீர் வீணாவதை குறைப்பதற்கான முயற்சியாக, ராவி நதி பஞ்சாப் பகுதியில் ஷாபுர்கண்டி அணை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கற்பழிப்பு, பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடையாளங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை
- கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் உள்ளானவர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அணை பாதுகாப்பு சட்டம், 2018
- அணை பாதுகாப்பு சட்டம், 2018 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அணையின் நீர்த்தேக்கம் தொடர்பான பேரழிவுகள் தடுப்புக்காக கண்காணிப்பு, ஆய்வு, நடவடிக்கை மற்றும் குறிப்பிட்ட அணைகள் பராமரிப்பு ஆகியவற்றை இந்த மசோதா வழங்குகிறது.
683 தனியார் FM ரேடியோ சேனல்களின் ஏலம்
- 236 நகரங்களில்,தொலைவில் உள்ள சில இடங்களில் 686 தனியார் FM ரேடியோ சேனல்களுக்கு ஏலத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசாங்கம் புதுடில்லியில் $60 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே வெள்ளம் விளைவிக்கும் பகுதிகளில் வெள்ளப் பாதுகாப்பு வேலைகள், வெள்ளப்பெருக்கங்களின் புனரமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான வெள்ள அபாயம் மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடரவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து.
ரயில்வே அமைச்சகம் சுமை வீதத்தில் 25 சதவீத தள்ளுபடி செய்ய முடிவு
- ரயில்வே அமைச்சகம் வெற்றுக் கன்டெய்னர்கள் மற்றும் வெற்று பிளாட் வேகன்கள் ஆகியவற்றின் போக்குவரத்திற்கு 25 சதவீத தள்ளுபடிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது
- முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையில் திருநங்கை மசோதா நிறைவேற்றப்பட்டது
- எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை நிராகரித்த பின்னர் மக்களவையில்திருநங்கை மசோதா(உரிமைகள் பாதுகாப்பு) நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் ஒரு திருநங்கைக்கு எதிராக பாகுபாட்டை தடை செய்வதே இந்த மசோதாவின் நோக்கம் ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு நலன் அளிக்கும் திட்டங்களை வழங்கவும் இது வழிவகுக்கிறது.
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் உடன் MoRD ஒப்பந்ததில் கையெழுத்து
- தீன் தயால் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா (டி.டி.யு.-ஜி.கே.ஓ) என்பது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தலைமை செயல்திட்டம் ஆகும் .
- மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறமை வளர்ச்சிக்கான பயிற்சி அளித்தல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் ஸ்ரீ. நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா நிறைவேறியது
- 2016 ஆம் ஆண்டுக்கான வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது வணிக ரீதியான வாட்கைத்தாய் மற்றும் அது தொடர்பான நியாயமற்ற நடைமுறைகளை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குழந்தை கருத்தரிக்க முடியாத தம்பதியருக்கு மட்டுமே இந்த வாடகைத் தாய் சட்டம் பொருந்தும்.
நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986க்கு பதிலாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2018 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு கமிஷனை நிறுவ முற்படுகிறது.
டெல்லி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றம்
- 1984 ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறக்கோரி டெல்லி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கும் வகையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012-ல் திருத்தம் செய்ய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பங்குப் பரிவர்த்தனைபட்டியலில் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்
- ஏழு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடக்க நிலை விற்பனை (ஐ.பி.ஓ)/தொடர்ந்தநிலை விற்பனை (எஃப்.பி.ஓ) மூலம் பங்குப் பரிவர்த்தனை பட்டியலில் சேருவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல்அளித்தது.
தேசிய ஹோமியோபதி ஆணைய வரைவு மசோதா 2018
- தேசிய ஹோமியோபதி ஆணையம் 2018-க்கான வரைவு மசோதாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2018 இந்திய முறை மருத்துவ மசோதாவுக்கான தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- 2018 இந்திய முறை மருத்துவ தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மசோதாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018
- கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்வெளித் திட்டத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பயணம் அதிகபட்சமாக 7 நாட்கள் இருக்கும். மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு தாங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்படும் விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் விண்ணில் செலுத்தும்.
விளையாட்டு அமைச்சகம் டாப்ஸ்[TOPS] திட்டத்தின் கீழ் விளையாட்டுவீரர்களுக்கு வழங்க 100 கோடி நிதி ஒதுக்கீடு
- டோக்கியோவில் 2020ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு , ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ், விளையாட்டு வீரர்கள் ரூ .100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை ஆணையத்தின் இயக்குனர் நீலம் கபூர் தெரிவித்தார்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்