இந்தியாவில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா – 1185 பேர் பலி!!
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்று கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியது. நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 2020ம் ஆண்டு இறுதியில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது 2021 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பரவத் தொடங்கியது. திடீரன்று நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
தமிழக கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு – மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி!!!
பாதிப்பு விகிதம்:
புதிதாக இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் 2,17,353 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் புதிதாக 1185 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,74,308 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 1,18,302 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,25,47,866 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி:
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 15,69,743 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 1.84 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சமாக அதிகரித்தது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்