தமிழக கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு – மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி!!!
பதவி உயர்வு:
மதுரையில் உள்ள பாத்திமா கல்லூரி மற்றும் சோழவந்தான் விவேகானந்தா கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணியில் இருந்தவர்களுக்கு அலுவலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு கல்வித்துறை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வை அங்கீகரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கல் – மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ விளக்கம்!!
மேல்முறையீடு:
ஆய்வக உதவியாளர்களுக்கான பதவி உயர்வை ரத்து செய்யக்கூறி தமிழக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில், கல்லூரி நிர்வாகம் அரசின் அரசாணையை மேற்கோள் காட்டி பதவி உயர்வு வழங்கலாம் என்று கூறியது.
வழக்கு தள்ளுபடி:
ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதில்லை. இரண்டு பதவிகளுக்கும் ஒரே சம்பள விகிதம் மற்றும் பணப்பலன்கள் தான் வழங்கப்படுகிறது. பொருந்தாத காரணங்களை கூறி ஒருவரின் பதவி உயர்வுக்கான உரிமையை மறுக்க கூடாது என்று கூறி மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்