உங்களது சேமிப்பு திட்டத்தின் வாயிலாக மாதாந்திர வருமானத்தை பெறுவது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதுபோன்ற திட்டம் குறித்தான முழு விபரங்களும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு திட்டம்:
இந்திய தபால் துறையானது நாட்டு மக்களுக்கு உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மாதம் தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமானத் திட்டத்தில் (எம் ஐ எஸ் ) முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்திற்கு ஐந்து வருடம் முதிர்வு காலம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபர் கணக்கில் ரூபாய் ஒன்பது லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4% வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு மாத வருமானம் ரூபாய் 5500 பயனாளரின் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு செலுத்தப்படும். திட்டத்தின் முடிவில் வட்டியாக ரூபாய் 3 லட்சத்து 33 ஆயிரத்தை பயனர்கள் பெறுவார்கள். திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்க விரும்பினால் அதற்கான விருப்பம் வழங்கப்படும். இருப்பினும் முதிர்வு காலத்திற்கு முன்னதாக தொகையை எடுக்க விரும்பும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இத்திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.