தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் – அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த பாதிப்பு பரவாமல் தடுக்க அரசு விமான நிலையங்களில் பரிசோதனையை கடுமையாக்கி இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய்த் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Exams Daily Mobile App Download
அப்போது அவர் பேசுகையில், முதல்வரின் அறிவுறுத்தல் படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய்யின் அறிகுறியான கொப்புளங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருக்கிறதா என கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அது மட்டுமில்லாமல் ஐ.சி.எம்.ஆர் விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் “மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்” அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் 300 முதல் 400 பயணிகளுக்கு ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குரங்கு அம்மைக்கு முன்னதாக கொரோனா பாதிப்பும் அதிகமாக பரவி வருவதால் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.