சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 64 உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
தங்கத்தின் விலை:
நாடு முழுதும் தங்கத்தின் விலையானது சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பல்வேறு சர்வதேச காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் சரிவடைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்க விலை உயர்ந்து தான் வருகிறது. ஆடி மாதம் தங்க விலை குறையும் அப்போது நகை வாங்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டு மக்கள் இருந்து வந்த நிலையில், தங்க விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறப்பு பற்றி அறியும் வழிமுறைகள் – புதிய திட்டம் அறிமுகம்!
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்துள்ளது. ரூ. 37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது, ரூ .4,728- க்கு விற்பனை ஆகிறது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்துள்ளது.ரூ. 60. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.