தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர்க்கு ரூ.25,000 அபராதம் – புதிய எச்சரிக்கை!
பள்ளி மாணவர்கள் விதிமுறைகளை மீறி ஓட்டுநர் உரிமம் பெறாமலேயே வாகனம் ஓட்டினால் அந்த மாணவனின் பெற்றோர்க்கு ரூ.25,000 அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்க்கு அபராதம்:
தமிழகத்தில் தற்போது போக்குவரத்து விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதால் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதாவது, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முறையாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை இளைஞர்கள் ஓட்ட முடியும். ஆனால், தற்போதெல்லாம் ஓட்டுநர் உரிமம் பெறாமலேயே பள்ளி மாணவர்கள் கூட இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர்.
Exams Daily Mobile App Download
போக்குவரத்து விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களே வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. என்ன தான் பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு அளித்தாலும் கூட அந்த விதிமுறைகளை எந்த மாணவர்களும் கடைபிடிப்பதில்லை. இதனை தடுக்கும் வகையில் திருப்பூர் போக்குவரத்துத்துறை தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் – அமைச்சர் விளக்கம்!
அதாவது, திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் 2019 சட்டப்பிரிவு ‘199 ஏ’ன் படி ஓட்டுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் அந்த வாகனத்தை ஒட்டிய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது சட்டம். மேலும், 25 வயது வரைக்கும் சம்மந்தப்பட்டவர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது எனவும், அந்த வாகனத்தை 12 மாதங்கள் இயக்க கூடாது என்பதும் சட்டமாகும். இந்த சட்டத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என திருப்பூர் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.