ரஜினியிடம் இந்த கேள்விகளை தவிர்க்கலாம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக போகிறார் என்ற தகவல் வருவதாக செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அரசியல் குறித்து கேட்க வேண்டாம் என கோபமாக பதிலளித்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறியது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..|| “மீண்டும் அகவிலைப்படி உயர்கிறது…ஆவலுடன் மக்கள்”..!!
தற்போது இது குறித்து உதயநிதி ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் ‘உதயநிதி முதலமைச்சராகுகிறாரா என்று எல்லாரிடமும் கேட்கப்படுகிறது’. ‘இது குறித்து முதலமைச்சரிடம் கேட்கலாம், என்னிடம் கேட்கலாம்’, ‘ஆனால் ரஜினி அவர் பாவம், படப்பிடிப்புக்காக விமான நிலையம் செல்கிறார், அவரிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேட்பது அதிர்ச்சியளிக்கிறது’ என்று கூறியுள்ளார்


























