தமிழக அரசு பேருந்துகளில் பார்சல் வசதி அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் உற்பத்தி பொருட்களை மற்ற ஊர்களுக்கு அனுப்பும்படியான பார்சல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பார்சல் வசதி
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக அவ்வப்போது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. அதே போல தற்போது அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்கும் பொருட்டு பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த கோரிக்கையை கடந்த மே 5 ஆம் தேதியன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் வைக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
அதாவது, எப்போதும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வியாபாரத்திற்காக லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலமாக மற்ற ஊர்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால், தற்போது குறைந்த அளவிலான பொருட்களை அந்த லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் வாடகைக்கு இணையாகவே பேருந்திலும் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 60,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்தில் உள்ள சுமை பெட்டியை வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள், பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பேருந்தின் சுமை பெட்டிகள் மூலமாக பொருட்களை கொண்டு செல்ல விரும்பினால் அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் சென்று விண்ணப்பிக்கும்படி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.