PM கிசான் திட்டத்தின் பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் பயனாளியாக இருக்கும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PM-KMY) என்ற திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கும் சேவையை அரசாங்கம் வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஓய்வூதிய திட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs) முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் இலக்குடன் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளாக இருப்பவர்கள் இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். அந்த வகையில் மத்திய அரசின் இந்த திட்டத்தை வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த பிரதான் மந்திரி கிசான் மான்-தன் யோஜனா (PM-KMY) திட்டமானது நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் 60 வயதை எட்டியதும் மாத ஓய்வூதியமாக ரூ. 3000ஐ வழங்குகிறது. இத்திட்டம் 18 முதல் 40 வயது வரையுள்ளவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியமாகும். இதில் சேரும் விவசாயிகளின் வயதைப் பொறுத்து, மாதாந்திர பங்களிப்பு ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். இப்போது PM-Kisan பலனை பயன்படுத்த விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள், PM-Kisan நன்மைகளை அளிக்கும் வங்கிக் கணக்குகளில் இருந்து தானாக பணம் எடுப்பதை அங்கீகரிக்க, பதிவு மற்றும் ஆட்டோ டெபிட்-ஆணை படிவத்தில் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர PM kisan இணையதளத்தின்படி, இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதியில்லாத நபர்கள் என ஒரு பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத் திட்டம், ஊழியர்களின் நிதி அமைப்புத் திட்டம் போன்ற பிற சட்டப்பூர்வ சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உள்ள SMFகள் இதில் கணக்கு துவங்க முடியாது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனாவை (PMSYM) தேர்ந்தெடுத்த விவசாயிகள்.
தமிழக அரசு பேருந்துகளில் பார்சல் வசதி அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பிரதான் மந்திரி லகு வணிகி மான்-தன் யோஜனா (PM-LVM) திட்டத்தை தேர்ந்தெடுத்த விவசாயிகள், உயர் பொருளாதார அந்தஸ்துள்ள பயனாளிகள் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் அனைத்து நிறுவன நில உரிமையாளர்கள் மற்றும் அரசியலமைப்பில் முன்னாள் மற்றும் தற்போதைய பதவி வைத்திருப்பவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டப் பேரவைகள், மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் ஆகியோர் பலன் பெற தகுதியற்றவர்கள் ஆவர்.