தமிழ் முதுகலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – முக்கிய அறிவிப்பு!
தமிழ் மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க பெறவுள்ளது.
மாணவர் சேர்க்கை:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு (Five Year Integrated M.A. Tamil) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலை (எம்.ஏ.) பட்டப் படிப்பு ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு நிகழாண்டுக்கான சோ்க்கை தற்போது தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான விண்ணப்பங்களை தஞ்சை தமிழ் பல்கலை யின் வலைதள முகவரியில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது. முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதையடுத்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரிக்கு ஆகஸ்ட்.5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
PM கிசான் திட்டத்தின் பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு!
விண்ணப்பத்தில் ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை குறிப்பிடுவது அவசியம். இந்தப் படிப்புக்கான சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 044-22542992 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.