பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாப்ட்.. தனது பிரபல செயலியை நிறுத்துவதாக அறிவிப்பு..!!
ஸ்கைப் (Skype) என்பது மைக்ரோசாப்டுக்கு (Microsoft) சொந்தமான ஒரு தகவல் தொடர்பு செயலியாகும். இதன் மூலம் வீடியோ அழைப்பு, குரல் அழைப்பு, உடனடி செய்தியிடல், மற்றும் கோப்பு பரிமாற்றம் போன்ற வசதிகளை பயனாளர்கள் மேற்கொள்ள முடியும். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பின் Zoom, WhatsApp வீடியோ கால் உள்ளிட்ட பல செயலிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், ஸ்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து வந்ததாக கூறப்பட்டது.
அதன்படி “வரும் திங்கட்கிழமை அதாவது மே 5 ஆம் தேதியுடன் ஸ்கைப் ஆன்லைன் காலிங் சேவைகளை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனர்கள் தங்கள் ஸ்கைப் கணக்குகளை டீம்ஸ் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.



























