மே 11ம் தேதி பொதுவிடுமுறை..நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி – மாவட்ட நீதிபதி உத்தரவு!
மே மாதம் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மாவட்ட நீதிபதி பொதுவிடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
பொதுவிடுமுறை:
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் மே மாதத்தில் 17 மேயர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக 4 மற்றும் 11ம் தேதிகளில் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து மே13ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கான்பூர் மாவட்ட நீதிபதி விஷக் ஜி ஐயர் அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மே – 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதாவது, கான்பூரில் வாக்குப்பதிவு நடைபெறும் மே 11ம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் சட்டத்தின் கீழ் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நாள் அன்று அனைவரும் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.