மார்ச் 14 முதல் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

0
மார்ச் 14 முதல் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி - தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
மார்ச் 14 முதல் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி - தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
மார்ச் 14 முதல் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் வரும் மார்ச் 14ம் தேதி முதல் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 21,500 அரசு பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று 2021ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் நடந்தது. ஆண்டின் முதல் சட்டமன்ற உரையை தமிழக ஆளுநர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், பிப்ரவரி 22ம் தேதி அன்று தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார். இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி அன்று நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!!

முன்னேற்பாடுகள் பணிகள்:

தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரசு பணியாளர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதல்கட்ட பயிற்சி:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில், 4,467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கோவை மாவட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள 21,500 அரசு பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிகள் 14ம் தேதி அந்தந்த தொகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் அளிக்கப்பட உள்ளது. தேர்தல் பயிற்சியில், வாக்குச் சாவடிகளில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் முறை, வாக்கு பெட்டிகளை கையாளும் முறை குறித்து பயிற்சியளிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!