ஓய்வூதியதாரர்களுக்கான பல புதிய வசதிகள் – தமிழ்நாடு நிதித்துறை அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்வதற்கான புதிய வசதியை தமிழ்நாடு நிதித்துறை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.
ஓய்வூதியதாரர்கள்:
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்று வருகிறது. இந்த குறிப்பிட்ட மாதத்திற்குள் ஓய்வூதியதாரர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாக வாழ்நாள் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நேர்காணல் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு நிதித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சேமிப்பு தொகை வட்டி 8% ஆக உயர்வு – கடன் சங்கம் அறிவிப்பு!
மேலும், ஓய்வூதியதாரர்களுக்காக புதிய மொபைல் ஆப் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மொபைல் ஆப் மூலமாக ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே அனைத்து வகையான சேவைகளையும் பெற்றுக் கொள்ளும் படியாக வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய சீட்டு, ஓய்வூதியம் பெறப்படும் விவரங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.