இனி மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இந்தியாவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பள்ளிகள் அனைத்தும் இயங்கி வருகிறது. மேலும், இவ்வாரியம் ஆனது அவ்வப்போது புதிய விதிகளை பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என்ற நடைமுறை தற்போது திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி “CBSE பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மேலும், 2024-25 ஆம் ஆண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே, பழைய விதிமுறைப்படி திருத்தப்பட்டு விட்டதால் இந்த விதியானது அடுத்த ஆண்டில் இருந்து முழுமையாக நடைமுறைக்கு வரும்” என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, “CBSE பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
























