TNPSC குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சையான தகவல் வெளியீடு – என்னதான் நடக்குது!

0
TNPSC குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சையான தகவல் வெளியீடு - என்னதான் நடக்குது!
TNPSC குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சையான தகவல் வெளியீடு - என்னதான் நடக்குது!
TNPSC குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சையான தகவல் வெளியீடு – என்னதான் நடக்குது!

TNPSC குரூப் 4 தேர்விற்கான தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், இதில் ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 450 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குரூப் 4 தேர்வின் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களின் விவரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிட்டது

செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளால் ஏற்படும் ஆபத்துகள் – சீன அரசு எச்சரிக்கை!

இதிலிருந்து தற்போது மேலும் ஒரு சர்ச்சையான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தரவரிசை பட்டியலில் 2500 Steno Typist பணியிடத்திற்கான தேர்வில் சங்கரன்கோவில் தேர்வு மையத்தில் எழுதிய 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருபவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் தேர்வர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக நிதியமைச்சர் பதிலளித்ததாவது, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மனித மேலாண்மைத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது இதற்கான விரிவான பதில்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த வாரத்தில் இதற்கான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!