நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அதிரடி உத்தரவு!!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் நாளை முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
கடந்த 2019ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று நோய் உலக மக்களிடையே மிகவும் வேகமாக பரவி வந்தது. இதன் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சத்திற்கு சென்றது. தொற்று பரவலை தடுப்பதற்கு அரசுகள் பல கட்ட முயற்சிகளையும் எடுத்து வந்தது. தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் – கல்வித்துறை உத்தரவு!!
அதிகரித்த தொற்று:
இந்தியாவிலேயே கொரோனா தொற்று மிகவும் அதிகமாகவும், வேகமாகவும் பரவிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். மக்கள்தொகை அங்கு அதிக அளவில் இருந்ததால் கொரோனா தொற்று நாட்டிலேயே அதிகம் பரவியது அம்மாநிலத்தில் தான். இதனால் மாநிலம் முழுவதும் நோய் கட்டுப்பாடு விதிகளை அறிவித்து மக்களை பின்பற்ற அறிவுறுத்தியது.
இரவு ஊரடங்கு:
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறைந்திருந்த கொரோனா தொற்றின் தாக்கம் மார்ச் மாத ஆரம்பத்தில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பல மாநிலங்களிலும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மரபணு மாறிய கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதல்வர் ஆலோசனை:
தொற்று பரவலை கட்படுத்துவதற்காக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மாநிலத்தில் உள்ள உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் மார்ச் 28ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை காலவரையற்ற இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை வணிக நிறுவனங்கள் இயங்காது. மருத்து கடைகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இருக்கும். மக்கள் சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Best moment 👍👍👍👍👍👍👍👍👍👍 super 🔥🔥🔥🔥🔥🔥🔥
என்னவோ தமிழ்நாடுக்கு ஊரடங்கு மாதிரி ஒரு அதிர்ச்சி தலைப்பு எதற்காக