10,12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை – மாநில கல்வித்துறை வெளியீடு!!
பள்ளிகள் திறப்பு தாமதம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டது. காரணம் கொரோனா நோய் பரவல் அம்மாநிலத்தில் உச்சத்தில் இருந்தது. இந்தியாவிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இருந்தது. மேலும், நோய்த்தாக்கம் அங்கு கட்டுக்குள் வருவதற்கு அதிக நாட்கள் எடுத்தது.
பிப்.19ம் தேதி விழுப்புரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!
பொதுத்தேர்வுகள்:
மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வி வாரியம் பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தற்காலிகமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரையம், 10ம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 29ம் தேதி தொடங்கி மே 20ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் www.mahahsscboard.in என்ற தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே அட்டவணையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு வாரியத்தின் அறிக்கை:
பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது தொடர்பாக பள்ளிக்கல்வி தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்காலிகமான அட்டவணையை முன்னதாக வெளியிடுவதன் மூலம் மாணவர்கள் பாடங்களை திட்டமிட்டு படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த மன அழுத்தம் குறையும். மேலும், பொதுத்தேர்வு அட்டவணை குறித்து ஏதேனும் பரிந்துரை அல்லது ஆட்சேபனை இருந்தால் அதனை பிப்ரவரி 22ம் தேதிக்குள் தேர்வு வாரியத்திற்கு எழுத்துப் பூர்வமாக அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்