ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் – விண்ணப்ப விநியோகம் எப்போது?

0
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் - விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழக அரசு வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் மேலும் இணைக்கப்பட உள்ளதற்கான விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:

2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன் பின்னரும் நடத்தப்பட்ட விரிவாக்க பணிகளின் மூலமாக தற்போது வரை ஒரு கோடியே 13 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலமாக பலனடைந்து வருகின்றனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரச திட்டமிட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் கட்டாயம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50 வினாக்கள் | 50 MCQ’s Important General Tamil Questions

தற்போது மறுவாழ்வு முகாம்களில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதே போல் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கொடுக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் இரண்டாவது வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!