மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படுமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆனது குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ஆனது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிமை தொகை பெற விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வசதி – ரயிலில் பயணம் செய்யும் முதியவர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்நிலையில் விராலிமலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது அவர்களது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் பட்சத்தில் திமுக-வும் உரிமைத் தொகையை உயர்த்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























