ஏப்ரல் 8 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்! காரணம் இது தான்!
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
மீனாட்சி அம்மன் கோவில்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு. வெளிநாட்டினர் கூட கண்டுகளிக்கும் அளவிற்கு இந்த கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படும் இதற்கு காரணம், மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக நடைபெறுவது தான் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா.
தமிழக “நம்ம ஸ்கூல் திட்டம்” .. அரசின் நூதன அழைப்பு!
அந்த வகையில் இந்த கோவிலில் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். அதனால் அதிகாலை 04.00 மணிக்கு அம்மன் மற்றும் சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download