மதுரை காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் – இன்று முதல் தொடக்கம்!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் பருவத்தேர்வுகள் இன்று (மே 5) முதல் இணையவழி மூலமாக தொடங்கப்படுகின்றன. 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர்.
பருவத்தேர்வுகள் தொடக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதே போல தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஆகிய 4 மாவட்டங்களில் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகள் என 179 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பயிலும் முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என 1.50 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இன்று (மே 5) முதல் தொடங்கப்பட்டு ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகளவில் 15.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 32 லட்சம் உயிரிழப்புகள்!!
இந்த தேர்வுகள் இணையவழியில் நடைபெறும். இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த கல்லூரியில் இருந்து கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். மாணவர்கள் அட்டவணையில் குறிப்பிட்ட தேர்வு தேதிகளில் வினாத்தாள்கள் பெறப்பட்டவுடன் தேர்வு எழுதலாம். பின்னர் தேர்வு எழுதிய வினாத்தாள்களை பிடிஎப் ஆக மாற்றி அதனை கல்லூரி தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலையை அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் மின்னஞ்சல் மூலமாக விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும். ஒரு போதும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்க கூடாது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்