காமராஜர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – மாணவர்கள் குழப்பம்!!
காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை தேர்வு அட்டவணை வெளியிடப்படாமல் இருப்பதால் தேர்வு நடைபெறுமா? என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பல்கலைக்கழக தேர்வுகள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உட்பட்ட நான்கு மாவட்டங்களில் 180க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் தன்னாட்சி கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மற்ற கல்லூரிகளில் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். தொடந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய பருவத்தேர்வுகள் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளிவராமல் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பின்பாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த தேர்வு அட்டவணைகள் குறித்து பல்கலைக்கழகமோ, கல்லூரி நிர்வாகமோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா – 1038 பேர் உயிரிழப்பு!!
இதனால் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா? என மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கழக தேர்வுகளுக்கான அட்டவணையை விரைந்து அறிவிக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, ‘அரியர் தேர்வு வைத்துள்ள மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான முடிவு ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பதால், வழக்கு முடிவை பொறுத்து தேர்வு அட்டவணைகள் வெளியாகும்’ என தெரிவித்துள்ளனர்.