தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!
தலைமை ஆசிரியர் கலந்தாய்வு:
வழக்கமாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் கலந்தாய்வு நடத்தவில்லை.
1 முதல் 11ம் வகுப்பு வரை சிறப்பு வகுப்புகள் – மாநில கல்வித்துறை தடை!!!
நீதிமன்ற வழக்கு:
நடப்பு ஆண்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுகள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக அரசு சார்பில் தமிழகத்தில் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதியானவர்கள் பட்டியல் பெறப்பட்டது.
மேல்முறையீடு:
மதுரை உயர்நீதிமன்ற கிளை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று அறிவித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை ஏற்று பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
All of it fine