நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் ஊரடங்கு அமல் – பிரதமர் முக்கிய முடிவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் ஏப். 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் ஊரடங்கு அமல்:
கடந்த 2019 ஆம் ஆண்டு அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் தாக்கம் இரண்டு ஆண்டுகளாக பல வளர்ந்த நாடுகளை கூட விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் கொரோனாவின் மூன்று அலைகளில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனாவின் நான்காம் அலை தாக்கம் வரத் தொடங்கி இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
அதனால் பல நாடுகளில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அந்தந்த அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அதன் படி குளிர் காலம் வர இருக்கும் நிலையில் நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது.
ஆனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அவை, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும். குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவற்றை கடைபிடிக்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்துவது சிரமமாக இருக்கும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.