பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறைகள்!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய தொடங்கினர். மேலும் தற்போது பல்வேறு வங்கியில் தொழில் தொடங்க கடனுதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெண்களுக்கான கடன் வசதி திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
மகிளா மணி
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் சாதாரண மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்தத் தொடங்கினர். மேலும் சொந்தமாக தொழில் தொடங்க முற்பட்டனர். கொரோனா பரவல் குறைந்த பின்பு பெரும்பாலானோர் சொந்தமாக தங்களுக்கு என்று தொழில் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இதில் ஏராளமான பெண்கள் தான் உள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – காலைநேர வகுப்புகள் நேர மாற்றம் அறிவிப்பு!
மேலும் தற்போது வங்கிகளில் தொழில் தொடங்க ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் அரசு வழங்கும் பயிற்சிகளை பெற்று அதன் மூலமாக கிடைக்கும் சான்றிதழை பயன்படுத்தி பல்வேறு சலுகைகளை பெறலாம். தற்போது பெண்களுக்கு என வழங்கப்படும் கடனுதவிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் குறிப்பாக “மகிளா மணி”, என்ற அமைப்பு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் இணைந்து தனிநபர்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடனுதவி பெற 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அத்துடன் இதன் மூலமாக ரூ.2 லட்ச வரை கடன் பெற முடியும். இந்த கடனை 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வட்டி விகிதம் 20% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஒவ்வொரு மாதமும் EMI முறையில் செலுத்தி கொள்ளலாம். இந்த கடனை பெற மகிளா மணி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில் பதிவு செய்த பிறகு மகிளா மணி குழு உறுப்பினர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இதற்கு மற்ற கடன்களில் வசூலிக்கப்படும் செயலாக்க கட்டணம், அபராதம் அனைத்தும் வசூலிக்கப்படுகிறது.