பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – காலைநேர வகுப்புகள் நேர மாற்றம் அறிவிப்பு!
கொரோனா காரணமாக நீண்ட நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகமாக பாதித்தது. இதை சரி செய்யும் விதமாக ஒடிசா மாநிலத்தில் காலை வகுப்புகள் தொடரும் மற்றும் கோடை விடுமுறையை குறைத்தும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, 3ஆவது அலைகளுக்கு பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அது போல் 10 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்து பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை இந்த கல்வியாண்டில் குறைந்துள்ளது. பொதுவாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடைபெறுகிறது.
10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – CBSE வாரியம் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட கல்வி இழப்பை சரி செய்ய ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையைக் குறைக்க ஒடிசா அரசு சனிக்கிழமை அறிவித்தது. மேலும் பள்ளி மற்றும் கல்வித் துறையின் முடிவின்படி, கோடை விடுமுறை ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது கோடை விடுமுறை 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளில், காலை வகுப்புகள் தொடரும் என்று நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சமீபத்திய அறிவிப்பின்படி, மே 1 முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை காலை வகுப்புகள் நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கான காலை வகுப்பு அமர்வு ஜூன் 5 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.