நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தை – வாடகை தாய் விவகாரம் – தமிழக அரசு விசாரணை!

0
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தை - வாடகை தாய் விவகாரம் - தமிழக அரசு விசாரணை!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தை - வாடகை தாய் விவகாரம் - தமிழக அரசு விசாரணை!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தை – வாடகை தாய் விவகாரம் – தமிழக அரசு விசாரணை!

தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகையான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்ததை அண்மையில் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாக புகார்கள் எழுந்தது. இது குறித்து தற்போது தமிழக அரசு விசாரித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வாடகை தாய்:

திரைப்பட நடிகையான நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவன் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இது குறித்து கேள்வி எழுந்த போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரிய வந்தது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க சில விதிமுறைகள் உள்ளது. இதனை நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் மீறியதாக புகார் எழுந்தது. இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து விசாரிக்கப்பட்ட போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் வாடகைத் தாய்க்கு உரிய தகுதியான அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Exams Daily Mobile App Download

மேலும் இத்தம்பதிக்கு 11.03.2016 அன்று பதிவு திருமணமும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்ததில் விதிகளை மீறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரம் சினை முட்டை சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!