பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு ஆனது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வுக்கு அடுத்தப்படியாக TN TET Paper 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.
Follow our Instagram for more Latest Updates
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதற்கான புதிய அரசாணையை வெளியிடுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை சிறந்த கல்வித்தகுதியை பெற்றிருக்கும் ஆசிரியர்கள் மட்டுமே வழங்க முடியும் என்பதால் இந்த உத்தரவு ஆனது பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைத்தாரர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை பதிவு.. UDAI அமைப்பு!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்