ஆதார் அட்டைத்தாரர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை பதிவு.. UDAI அமைப்பு!
இந்தியாவில் ஆதார் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஆதார் எண்ணை வைத்து பல வித மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அதனால் ஆதார் அட்டைத்தார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தி வருகிறது.
ஆதார் :
இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்த ஆதார் கார்டு முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதனால் ஆதாரில் விவரங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்து ஆதாரை புதுப்பிக்க வேண்டியது அவசியம். தற்போது அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் ஆதாரை வைத்து பல மோசடிகள் நடந்து வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நம் ஆதார் கார்டுடன் மொபைல் எண், வங்கி மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்து வைத்துள்ளதால் எதிர்பாராத விதமாக உங்கள் ஆதார் கார்டு மோசடி நபர்களிடம் சிக்கினால் அதனை வைத்து அவர்கள் வங்கி சார்ந்த விவரங்களை சேகரித்து பண கையாடலில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆதார் அமைப்பு மற்றும் வங்கியில் இருந்து பேசுவது போல ஆதார் அட்டைதாரர்களை அணுகி நாங்கள் அனுப்பியுள்ள லிங்கை கிளிக் செய்து ஆதார் கார்டை உடனடியாக அப்டேட் செய்ய வலியுறுத்துகின்றனர்.அதனை நம்பி மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்து உள் நுழையும் போது ஆதார் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை மோசடியாளர்கள் கைப்பற்றுகின்றனர்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இனி இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை – 7வது ஊதியக் குழு அப்டேட்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஆதார் அமைச்சகம் முக்கிய எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதாரை புதுப்பிக்கும் படி ஆதார் அமைச்சகம் தனிப்பட்ட நபர்களை தொலைபேசி வாயிலாக அழைக்காது. அதனால் ஆதார் அமைப்பில் இருந்து போன் செய்வதாக கூறினால் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் ஆதாரை புதுப்பிக்க அதிகாரபூர்வ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்