மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இனி இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை – 7வது ஊதியக் குழு அப்டேட்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இனி தங்களது ஓய்வூதிய தொகைக்கான மாற்றத்தில் கூடுதல் கட்டணத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று 7வது ஊதியக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியம்:
மத்திய அரசின் ஊழியர்கள் அனைவரும் பணி நிறைவு செய்த பிறகு அவர்களின் உழைப்பிற்கு தகுந்த பலனாக அவர்களின் முதிர்வு காலத்தை கழிக்கும் வகையில் அவர்களின் பணி பிரிவிற்கு ஏற்ற வகையில் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, ஓய்வூதியத் திருத்தம் அல்லது பணிநீக்கத்திற்கான விண்ணப்பம் பணி ஓய்வுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படுவது போன்ற முந்தைய விதிகளை மாற்றியுள்ளது.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் – வெளியான ஷாக் தகவல்.. காரணம் இது தான்!
Exams Daily Mobile App Download
அதாவது, ஓய்வு பெறும் காலத்திற்க்கு முன்பாகவே, ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை மாற்றுவதற்கான விதிகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) அக்.25ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர் தனது மொத்த ஓய்வூதிய தொகையில் இருந்து 40 % தொகையை மொத்த தொகையாக மாற்றுவதற்கு தகுதியுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊழியர் தான் ஓய்வு பெறும் சமயத்தில் இந்த சதவீதத்தை மீண்டும் மாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும், இதற்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.