தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் – வெளியான ஷாக் தகவல்.. காரணம் இது தான்!

0
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் - வெளியான ஷாக் தகவல்.. காரணம் இது தான்!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் - வெளியான ஷாக் தகவல்.. காரணம் இது தான்!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் – வெளியான ஷாக் தகவல்.. காரணம் இது தான்!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் சில மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இதனால் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஊதியம்:

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை நிர்வகிப்பதில் பல சவால்களை சந்தித்தனர். மேலும் மாவட்டக் கல்வி அதிகாரியால் திறம்பட பணிகளை செய்வதில் சிக்கல் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அதிகாரிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டனர். புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து தற்போது மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தினால் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமையாக பதவி ஏற்கவில்லை. அதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. வழக்கமாக மாதந்தோறும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆதார் கார்டில் பிரச்சனையா? புகார்களை தெரிவிக்க உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

பிறகு இதில் மாவட்ட கல்வி அலுவலர் கையெழுத்திட்டு தலைமையகத்திற்கு அனுப்புவார். இந்த மாதம் நிர்வாக மாற்றம் காரணமாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. அத்துடன் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான நிதி பரிமாற்ற நடைமுறைகள் கிடப்பில் உள்ளது. இந்த காரணத்தினால் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இந்த மாதத்திற்கான ஊதியம் பெற காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!