தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிக்கையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளதால் டெங்கு, மலேரியா, எச் 1 என் 1 உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பொது சுகாதாரப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு, மலேரியா, எச் 1 என் 1 உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் ‘நகர்ப்புற நலவாழ்வு மையங்களை’ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தை – வாடகை தாய் விவகாரம் – தமிழக அரசு விசாரணை!
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகம் முழுவதும் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவ துறையில் செவிலியர் பணியிடத்தில் 4,307 காலிப்பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதுவரை 1,021 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் மீதமிருக்கும் காலிப்பணியிடங்கள் இன்னும் 2 மாதங்களில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்