தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள், மாதந்தோறும் உணவு பொருட்களை பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடியான உத்தரவுகள் வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திடீர் உத்தரவு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை வாயிலாக எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கும்போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாக, ரேஷன் கார்டுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதையடுத்து தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்களுக்கு சென்றடைகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உட்பட அலுவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத், ரேஷன் கடை ஊழியர்கள் தினமும் சரியான நேரத்திற்கு வந்து கடைகளை திறந்து வைக்க வேண்டும்.
மேலும் உணவு பொருட்களின் அன்றாட இருப்பு விவரத்தை தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும். இதை அடுத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால், ரேஷன் அட்டைதார்களை திருப்பி அனுப்பாமல் உரிய பதிவேட்டில் அட்டைதாரர்களிடம் கையொப்பம் வாங்கி கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதேபோல், அத்தியாவசியப் பொருட்களை மண்ணெண்ணெய் பேரல்கள் மற்றும் உரங்கள் அருகில் வைக்கக் கூடாது, பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும் பணியின் போது ஊழியர்கள் பொதுமக்களுடன் கோபமாக நடந்து கொள்ள கூடாது, தன்மையாக பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ரேஷன் கடைகளில் ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி சிறப்பு பரிசுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.