தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களின் பங்கும் இன்றியமையாததாகும். அரசு ஊழியர்கள் மக்களும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகின்றனர். அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. கடந்த வருடம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு ஊழியர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அடுத்ததாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர கோரி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தேனி மாவட்டம் கம்பம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சார்பில் நடைபெற்றது. இதில் வட்டார பொருளாளர் கணேசன் தலைமை தாங்கினார். மேலும் ஏராளமான ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.