திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் திடீர் உத்தரவு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. ஏனெனில் நேரடி இலவச தரிசனத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அத்துடன் பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதன் காரணமாக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
TN TRB 4989 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 – முக்கிய உத்தரவு!
அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பக்தர்கள் இலவச நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த உள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் இனி திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்படுவார்கள். அத்துடன் வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கும் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அத்துடன் விஜிலென்ஸ், எஸ்டேட் மற்றும் சுகாதார அதிகாரிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தும் போது ஏதேனும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என்று தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.