TN TRB 4989 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக TRB செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய உத்தரவு:
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் அரசு சார்ந்த போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து நோய் பரவல் குறைந்து வருவதால், அரசு போட்டித்தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என பலர் எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளனர். TN TRB வருடாந்திர அட்டவணையின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த மாதம் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் 4989 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயது வரை இருக்க வேண்டும். TN TRB இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம், பிஜி, பிஎட் முடித்திருக்க வேண்டும். வருடாந்திர அட்டவணையின் படி இடைநிலை ஆசிரியர் பணியில் 3902 காலிப்பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியில் 1087 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு இதோ!
இந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வுமுறை எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் பிற செயல்முறைகளின் அடிப்படையில் இருக்கும். மேலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ 20,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இந்த நிலையில் ஆசிரியன்றி காலியாக உள்ள உபரி இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆணையரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.