தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
தமிழகத்தில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் பாட தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.
பொதுத் தேர்வு:
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து இரண்டு வருடம் தேர்வுகள் நடத்தபடாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆகையால், இந்த வருடம் கண்டிப்பான முறையில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
MASKED ஆதார் கார்டு ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதன்படி,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதியான இன்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. ஏற்கனவே அறிவித்திருந்த படி, 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஜூன் 1 ல் தொடங்கி 9ம் தேதி வரை நடக்க உள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்கள் 9.95 லட்சம் மாணவ,மாணவிகள் 3,936 மையங்களில் எழுதினார்கள். இந்நிலையில் தேர்வின் இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்று முடிவடைந்திருக்கும். 10ம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மே 10 ல் தொடங்கிய பிளஸ் 1 தேர்வு நாளை முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.