கடைசி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் – பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகத்தின் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக கல்விக் குழுவின் 38-வது கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், சென்னை, மும்பை, டெல்லி ஐஐடிக்களின் மூத்த பேராசிரியர்கள், சாஸ்த்ரா பல்கலை டீன்கள், இணை டீன் கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் இருந்து தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்தனர். அதனை தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பல்கலையின் முக்கிய முடிவுகள் :
- பொறியியல், சட்டம், கல்வி, எம்பிஏ பிரிவுகளில் 2020-ல்பட்டம் பெறும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், தொடர்ந்து நேரடி மதிப்பீடும் நடத்தப்படும்.
- ஜூனியர் பேட்ச் மாணவர்களுக்கு இதுவரையிலான அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். விரும்பினால் பின்னர் செம்மைத் தேர்வு (இம்ப் ரூவ்மென்ட்) எழுதலாம்.
- ஆன்லைன் கல்விக்கான சூழல் அதிகரித்துவரும் நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), இந்திய பார் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் கலந்து பேசி குறைந்தபட்சம் 90 கல்வி நாட்கள் என்ற வரையறையை மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம்.
- குறைந்தபட்சம் 50% வருகைப்பதிவு கொண்டவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |